search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் வசந்த உற்சவம்
    X
    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் வசந்த உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் வசந்த உற்சவம்

    திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் எதிரே உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் தேசிகர் சாமிக்கு வசந்த உற்சவ சாற்றுமுறை நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 6-ந்தேதி முதல் வசந்த உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினசரி தேசிகருக்கு காலையில் சிறப்பு பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேசிகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகளில் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    இதில் நேற்று கோவில் எதிரே உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் தேசிகர் சாமிக்கு வசந்த உற்சவ சாற்றுமுறை நடைபெற்றது. தொடர்ந்து ஹயக்ரீவர் மற்றும் தேசிகர் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, தேசிகர் ஹயக்ரீவரை வணங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஹயக்ரீவர் மற்றும் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×