search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம்செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும்உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசாமி தரிசனம்செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமாக மக்கள் வந்துசாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம்செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் சாமி மற்றும் அம்மன் சன்னதி முன்பு பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் நடந்து வரும் வழியில் பிளாஸ்டிக் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×