என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
Byமாலை மலர்21 Jun 2019 4:14 AM GMT (Updated: 21 Jun 2019 4:14 AM GMT)
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
திருப்பணிகள் முடிந்த நிலையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 5 நிலை ராஜகோபுரம், விநாயகர், ராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்கள் மற்றும் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரமாண்ட யாகசாலையும், 37 குண்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளான கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதற்கால யாகபூஜை நடைபெற்றது.
நேற்று காலை, மாலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பசு, யானை, நாட்டிய குதிரை உள்பட தசதரிசன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சவடி ஜெயமாருதி சேவா அறக்கட்டளை செய்துவருகிறது.
திருப்பணிகள் முடிந்த நிலையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 5 நிலை ராஜகோபுரம், விநாயகர், ராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்கள் மற்றும் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரமாண்ட யாகசாலையும், 37 குண்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளான கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதற்கால யாகபூஜை நடைபெற்றது.
நேற்று காலை, மாலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பசு, யானை, நாட்டிய குதிரை உள்பட தசதரிசன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சவடி ஜெயமாருதி சேவா அறக்கட்டளை செய்துவருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X