என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
Byமாலை மலர்20 Jun 2019 4:13 AM GMT (Updated: 20 Jun 2019 4:13 AM GMT)
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.
கொடைக்கானல் நகரில் உள்ள அப்சர்வேட்டரி, புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி அம்மன் தேர் பவனி நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய நடந்தது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சக்தி கரகம் எடுத்தல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. முன்னதாக பேரிபால்ஸ் அருவி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடைபெற்றன. இதில் 1,000-க் கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி மறு பூஜையும், பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள், புதுக்காடு பகுதி பொது மக்கள் செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சக்தி கரகம் எடுத்தல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. முன்னதாக பேரிபால்ஸ் அருவி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடைபெற்றன. இதில் 1,000-க் கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி மறு பூஜையும், பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள், புதுக்காடு பகுதி பொது மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X