search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.
    X
    பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி.

    பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

    பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.
    கொடைக்கானல் நகரில் உள்ள அப்சர்வேட்டரி, புதுக்காடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி அம்மன் தேர் பவனி நகரின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய நடந்தது.

    அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சக்தி கரகம் எடுத்தல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று பொங்கல் வைத்தல், முளைப்பாரி எடுத்தல், மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. முன்னதாக பேரிபால்ஸ் அருவி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர்.

    பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடைபெற்றன. இதில் 1,000-க் கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி மறு பூஜையும், பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள், புதுக்காடு பகுதி பொது மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×