search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாடலீஸ்வரருக்கு தோப்பு உற்சவம்
    X

    பாடலீஸ்வரருக்கு தோப்பு உற்சவம்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான தோப்பு உற்சவம் நடைபெற்றது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் குளம் அருகே வன உற்சவம் என்கிற தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தோப்பு உற்சவம் நடைபெற்றது. இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக காராமணிக்குப்பம் குளத்தின் அருகே வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் பாடலீஸ்வரரும், பெரியநாயகி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர்.

    இதனை தொடர்ந்து சாமிகள் முக்கிய வீதிகளில் வீதி உலா சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ருத்ரமூர்த்தி, பிரபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×