என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி
Byமாலை மலர்19 May 2019 6:23 AM GMT (Updated: 19 May 2019 6:23 AM GMT)
நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயூத்துறையில் வைகாசி விசாகமான நேற்று தாமிரபரணி ஆறு பிறந்த நாளையொட்டி மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆற்றுக்கு ஒரு கரையில் இருந்து மறுகரை வரைக்கும் 15 பட்டு புடவைகளை ஒன்றாக இணைந்து ஆற்றில் சாத்தி சிறப்பு பூஜையும், மகா ஆரத்தியும் நடத்தினார்கள். ஜடாயூத்துறையில் நேற்று அமலைசெடிகள் தேங்கி கிடந்தது. இதை அந்த ஆரத்தி பூஜைக்கு வந்தவர்கள் அகற்றினார்கள்.
இந்த சிறப்பு பூஜையில் ராமானந்தாசுவாமிகள், ஆத்மானந்தா சுவாமிகள், வரதராஜூ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில் சித்தர்கள் கோட்ட ஆரத்திக்குழு, 27 சமுதாய பொதுமக்கள் சார்பில், தாமிரபரணி பவுர்ணமி தீப ஆரத்தி விழா, வைகாசி விசாக நதி உற்பவ நாள் விழா நடந்தது. விழாவில் தத்துவ நிஷ்டானந்த சரஸ்வதி சுவாமி தாமிரபரணி நதிக்கு தீப ஆரத்தியை தொடங்கி வைத்தார். பொன் பெருமாள் தாமிரபரணி மகா புஷ்கர நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.
தாமிரபரணி கலச பூஜை, தீப ஆரத்தி விழா நினைவு மலர் வெளியீடு, சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் மகளிருக்கு மஞ்சள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பாபநாசசுவாமி கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர்.
இந்த சிறப்பு பூஜையில் ராமானந்தாசுவாமிகள், ஆத்மானந்தா சுவாமிகள், வரதராஜூ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில் சித்தர்கள் கோட்ட ஆரத்திக்குழு, 27 சமுதாய பொதுமக்கள் சார்பில், தாமிரபரணி பவுர்ணமி தீப ஆரத்தி விழா, வைகாசி விசாக நதி உற்பவ நாள் விழா நடந்தது. விழாவில் தத்துவ நிஷ்டானந்த சரஸ்வதி சுவாமி தாமிரபரணி நதிக்கு தீப ஆரத்தியை தொடங்கி வைத்தார். பொன் பெருமாள் தாமிரபரணி மகா புஷ்கர நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.
தாமிரபரணி கலச பூஜை, தீப ஆரத்தி விழா நினைவு மலர் வெளியீடு, சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் மகளிருக்கு மஞ்சள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பாபநாசசுவாமி கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X