என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாரங்கபாணி கோவிலில் விடையாற்றி உற்சவம்: புஷ்ப பல்லக்குகளில் 3 பெருமாள் வீதியுலா
Byமாலை மலர்30 April 2019 3:25 AM GMT (Updated: 30 April 2019 3:25 AM GMT)
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி புஷ்ப பல்லக்குகளில் 3 பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்த திருத்தலமாக போற்றப்படும் இக்கோவில், பெருமாள் வீற்றிருக்கும் பஞ்ச ரங்க கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு என 2 வேளை பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி ஆகிய 3 பெருமாள்களும் 3 புஷ்ப பல்லக்குகளில் தனித்தனியாக எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 3 பெருமாள்களையும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவு என 2 வேளை பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி ஆகிய 3 பெருமாள்களும் 3 புஷ்ப பல்லக்குகளில் தனித்தனியாக எழுந்தருளி வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 3 பெருமாள்களையும் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இளையராஜா, நிர்வாக அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X