என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோட்டூர் முத்து மாரியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு
Byமாலை மலர்30 March 2019 6:44 AM GMT (Updated: 30 March 2019 6:44 AM GMT)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம் மன் கோவிலில் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு அம்மனுக்கு காப்புகட்டி தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒரு பகுதியான நேற்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண் கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி கிடைக்க திருவிளக்கு பூஜை யில் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவிகள் மதிப் பெண்கள் அதிகம் பெறுவதற்கும் விளக்கு பூஜையில் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை, பெரிய காரை, அடசிவயல், கோட் டூர், கள்ளிக்குடி, நாகாடி, புதுக்கோட்டை, நயினார் வயல், திருமண வயல், பரமக்குடி மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதி விழாவாக பூச்சொரிதல் விழா, அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து முளைப்பாரி திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது, இதே போன்று முளைப்பாரி திருவிழா கோட்டூர், நாகாடி, பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல், சுற்றியுள்ள 50க்கும் மேற் பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு அம்மனுக்கு காப்புகட்டி தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒரு பகுதியான நேற்று சுமார் 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெண் கள் மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம், லட்சுமி பாக்கியம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி கிடைக்க திருவிளக்கு பூஜை யில் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவிகள் மதிப் பெண்கள் அதிகம் பெறுவதற்கும் விளக்கு பூஜையில் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை, பெரிய காரை, அடசிவயல், கோட் டூர், கள்ளிக்குடி, நாகாடி, புதுக்கோட்டை, நயினார் வயல், திருமண வயல், பரமக்குடி மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதி விழாவாக பூச்சொரிதல் விழா, அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து முளைப்பாரி திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற உள்ளது, இதே போன்று முளைப்பாரி திருவிழா கோட்டூர், நாகாடி, பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல், சுற்றியுள்ள 50க்கும் மேற் பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X