search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எட்டாம் கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பொங்கலிட்டபோது எடுத்த படம்.
    X
    எட்டாம் கொடை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பொங்கலிட்டபோது எடுத்த படம்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடைவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். 
    Next Story
    ×