search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் - 6 மணி நேரம் தரிசனம் ரத்து
    X

    திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் - 6 மணி நேரம் தரிசனம் ரத்து

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. இதனால் 6 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யபட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    இதனையொட்டி கோவில் நடை இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை சாத்தபட்டு, 6 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யபட்டது.

    11 மணியில் இருந்து 12 மணிவரை நெய்வேத்தியம் நடடந்தது. அதைத் தொடர்ந்து 12 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    ஆழ்வார் திருமஞ்சனத்தால் இன்று நடக்கயிருந்த அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.
    Next Story
    ×