search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை தாயார் திருவடி சேவை
    X

    ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை தாயார் திருவடி சேவை

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. ஸ்ரீ ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலையில் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு திருவடி சேவையை போல ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கும் ஆண்டுக்கு ஒரு முறை திருவடி சேவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவடி சேவை நடைபெற உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு திருவடி சேவையுடன் தாயார் புறப்பட்டு கொலு மண்டபத்தை மாலை 4.45 மணிக்கு வந்தடைகிறார். இரவு 10.30 மணி வரை தாயார் திருவடி சேவையில் மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 10.30 மணிக்கு மேல் தாயார் மூலஸ்தானத்திற்கு புறப்பட்டு சென்றடைவார்.
    Next Story
    ×