search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று அம்மன் குமாரிகா அம்சத்திலும், 11-ந் தேதி திருமூர்த்தி, 12-ந் தேதி கல்யாணி (துர்க்கை), 13, 14, 15-ந் தேதிகளில் முறையே ரோகிணி, காளகா, சண்டிகா அம்சத்திலும் (மகாலெட்சுமி) 16,17,18-ந் தேதிகளில் சாம்பவி, துர்க்கா, ஸுபத்ரா (சரஸ்வதி) ஆகிய அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    10-ந் தேதியிலிருந்து காலையிலும், மாலையிலும் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. கோவிலின் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×