search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

    பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.
    சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் என நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீசாரும், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

    இதேபோல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டனர். 
    Next Story
    ×