search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
    X

    பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா

    பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பர்மாநகரில் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 52-ம் ஆண்டு பங்குனி உத்திர தீ மிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தினமும் அம்மன் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் தினமும் நண்பகல் மற்றும் இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதி விழாவையெட்டி மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×