என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
Byமாலை மலர்11 April 2017 5:56 AM GMT (Updated: 11 April 2017 5:56 AM GMT)
பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பர்மாநகரில் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 52-ம் ஆண்டு பங்குனி உத்திர தீ மிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தினமும் அம்மன் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தினமும் நண்பகல் மற்றும் இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதி விழாவையெட்டி மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனை, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தினமும் அம்மன் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தினமும் நண்பகல் மற்றும் இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதி விழாவையெட்டி மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X