என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவில் தெப்போற்சவ விழாவில் பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்9 March 2017 7:47 AM GMT (Updated: 9 March 2017 7:47 AM GMT)
திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவ விழா நேற்று தொடங்கியது. தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று சீதா, லட்சுமணர் சமேத ஸ்ரீராமர் வலம் வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருப்பதியில் வருடாந்திர தெப்போற்சவ விழா நேற்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாத ஏகாதசியன்று தொடங்கி பவுர்ணமியன்று முடிவு பெறும் விதமாக தெப்போற்சவ விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி, ஏகாதசியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது.
இந்த தெப்போற்சவ விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே இரண்டடுக்கு தெப்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதனை கான திரளான பக்தர்கள் திரண்டனர்.
விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாத ஏகாதசியன்று தொடங்கி பவுர்ணமியன்று முடிவு பெறும் விதமாக தெப்போற்சவ விழா நடை பெறுவது வழக்கம். அதன்படி, ஏகாதசியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது.
இந்த தெப்போற்சவ விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக, திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருக்குளத்தின் நடுவே இரண்டடுக்கு தெப்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தெப்போற்சத்தின் முதல் நாளான நேற்று மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீராமர் உற்சவ மூர்த்திகள் 5 முறை தெப்பத்தில் வலம் வந்தனர். இதனை கான திரளான பக்தர்கள் திரண்டனர்.
விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 12-ந் தேதி வரை ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X