search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    தர்கா
    X
    தர்கா

    நாகூர் சின்னதைக்காலில் உள்ள தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகூர் மெயின்ரோட்டில் உள்ள சின்ன தைக்காலில் செய்யது பீர் பாலக் ஷா ஒலியுல்லா தர்கா நடந்தது. இதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
    நாகூர் மெயின்ரோட்டில் சின்ன தைக்காலில் செய்யது பீர் பாலக் ஷா ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம்பூசும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ஆண்டவர் சமாதிக்கு டிரஸ்டி செய்யது அகமது சந்தனம் பூசினார். இதில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

    கந்தூரி விழா நிறைவு நாளான இன்று (வெள்ளிகிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×