search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகூர் தர்கா
    X
    நாகூர் தர்கா

    முகரம் பண்டிகை: நாகூர் தர்கா வாசலில் நின்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

    நேற்று முகரம் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. தர்கா மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகூர் தர்காவில் ஆண்டு தோறும் முகரம் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடத்தப்படும்.கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு வாரத்தின் 3 கடைசி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று முகரம் பண்டிகையையொட்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை. தர்கா மூடப்பட்டதால் இஸ்லாமியர்கள் வெளியே நின்று பிரார்த்தனை செய்தனர்.
    Next Story
    ×