
படிபூஜைக்கு ரூ.75 ஆயிரம் கட்டணம் பக்தர்கள் செலுத்த வேண்டும். தற்போது 2040-ம்ஆண்டு வரை பக்தர்கள் படிபூஜைக்கு முன்பதிவு செய்துள்ளனர். இதில் இருந்தே படிபூஜையின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல ரூ.40ஆயிரம் கட்டணத்தில் நடத்தப்படும் உதயாஸ்தமன பூஜைக்கு 2026-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். திருவிழாவின் போது நடத்தப்படும் உத்சவபலி பூஜைக்கு கட்டணம் ரூ.30 ஆயிரம் ஆகும். சபரிமலையில் பூக்கள் அலங்காரம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.50 ஆயிரம் செலுத்தி புஷ்ப அலங்காரத்திற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம். களபாபிஷேகம் செய்ய விரும்பும் ஐயப்ப பக்தர்கள் ரூ.8 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும்.