
ஆனால் இக்கோவிலில் மட்டும் மாலையில் நடத்தப்படுவது சிறப்புமிக்கதாகும். அதன்படி வைகுண்ட ஏகாதசியான 13-ம் தேதி பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளுகிறார்.
கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வந்த வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு அடைந்ததை தொடர்ந்து நேற்று சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதையொட்டி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி சாற்றுமுறை வைபவம் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.