கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம் வழங்கப்பட்டது
கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக கோவில்களில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை மாத நிறைபுத்தரிசி பூஜை நேற்று காலை நடந்தது. அதன்படி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக் கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக நெற்கதிர் கட்டுகளை பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.