
அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.
இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.