
அப்போது அவர் பேசியதாவது:-
வைகுண்ட ஏகாதசி அன்று சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக, தரிசன வரிசைகள், செல்போன்கள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பறை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில் லட்டுகள், காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஸ்டால்கள் வைக்கப்படும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி, சந்திரகிரி பகுதிகளில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும். பொறியியல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை 11-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.