
* வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
* கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
* பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்.
* யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
* குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
* கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
* ஈசான்ய தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.
* நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
* இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
* சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
* அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
* காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
* எம தீர்த்தம் - மரண பயம் நீங்கும்.
* குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்.
* நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீங்கும்.
* பயோஷினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.(பாலாறு)
* அறுபத்தாறு - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.கோடி தீர்த்தம்
* வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
* சரயு தீர்த்தம் - மனக்கவலை தீர்க்கும்.
* தேவ தீர்த்தம் - சகல பாவங்களையும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.