
தொடர்ந்து சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.
விழாவின் சிகர நாளான நேற்று அய்யா வைகுண்டர் அவதார தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு, 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வந்தனர். அப்போது கடற்கரையில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ அரகரா அரகரா’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவதார விழா பணிவிடைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.
முன்னதாக அய்யா வைகுண்டர் அவதாரபதியில் புதிதாக அமைக்கப்பட்ட கல்நிலை வாயிலை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.