
அதன்பின்னால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநாமக்கொடி ஏந்தி பாதயாத்திரையாக மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் தர்மபதியை அடைந்ததும் பகல் பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு, பணிவிடை, அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றி இனிமம் வழங்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.
அதேபோல் சென்னை அம்பத்தூர் ஓரகடத்தில் உள்ள அய்யா ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் அவதாரதின விழாவையொட்டி பாடி எஸ்.பி.சி.திருமண மண்டபத்தில் இருந்து அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தொடங்கி வைத்தார். இதில் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.