
இந்தநிலையில் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அப்போது பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளியானை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வருகிறார். தேரோட்டம் 3-ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த நாள் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.