திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் திண்டுக்கல் பெரியகடைவீதி திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார்கள் உறவின் முறையை சேர்ந்த திண்டுக்கல் மேலப்பேட்டை நாடார்கள் உறவின்முறை கட்டிடத்தில் ஆண்டுதோறும் அம்மன் எழுந்தருளுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12 மணி அளவில் அந்த கட்டிடத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது மாவிளக்கு பூஜை, சிறப்பு வழிபாடு, நெய்வேத்தியம் ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை உறவின்முறை தலைவர் ரமேஷ்பாபு தொடங்கி வைத்தார்.
அதையடுத்து உறவின்முறை கட்டிடத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் 4 ரதவீதிகள் வழியாக வந்து கோட்டை மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.