
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.
பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.