
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு வருடமும், தை, திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் அதன்படி கடந்த 6-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 7-ம் திருநாளன்று இரவு சுவாமியும், அம்பாளும் கைலாசபர்வத கற்பக, விருட்சக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
9-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருத்தேர்களில் விநாயகரையும், சுவாமி, அம்பாளையும் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8-30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தா வர்ணம் கிகழ்ச்சியும் நடக்கிறது.