
இந்தநிலையில் 14-ந்தேதி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு அதிகாலை முதலே வருகை தந்து குவிந்தனர்.மழை மற்றும் மலைப்பாதையில் மண்சரிவு காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக பக்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என நீண்ட நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது என அதிகாரிகள் கூறியதை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு பக்தர்கள் கேட்டிற்கு முன்பு சாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.