
தினமும் சிறப்பு பூஜைகள், மண்டகப்படி தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. சுவாமி- அம்பாள் சப்பர உலா கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ம் நாளில் தேரோட்டம் வழக்கமாக நடைபெறும்.
இந்த ஆண்டு 9-ம் நாளான நேற்று தேரோட்டத்திற்கு பதிலாக கோவில் வளாகத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.