
இந்த ஆண்டிற்கான பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெறக்கூடிய நாளான நாளை(சனிக்கிழமை) அமைகிறது. ஆனால் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் வழக்கம்போல கோவிலுக்குள் நடைபெறும். அதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பவுர்ணமி நாளான நாளை கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோவில் துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.