
இதற்கிடையே 2 நாட்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், நேற்று வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மொட்டை அடிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் வாங்கி சென்றனர். இதனால் மொட்டை அடிக்கும் இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் இருக்கும் வகையில், கோவில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.