
இதனையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நின்றது. இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு விசேஷ பூஜையும் சர்வ அலங்காரமும் தீப ஆராதனையும் நடைபெற்றது.

காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் திரளாக குவிந்து சட்டத்தேரினை வணங்கி வடம் பிடித்து இழுத்தனர். காலை 8.50 மணிக்கு நிலையில் இருந்து சட்டத் தேர் நகர்ந்தது. சன்னதி தெரு, கீழரதவீதி, பெரிய ரதவீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் வலம் வந்தது. 10.45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இதனை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பை கழற்றிவிட்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.
திருவிழாவின் முத்தாய்ப்பாக பாவாடை தரிசனம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சம்ஹாரம் செய்த உக்கிரத்தை தணிக்கும் விதமாக வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு நேற்று மல்லிகை மலர்களால் வெள்ளைசாத்துப்படி அலங்காரமும் செய்யப்பட்டது.