
இவை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் இருந்தது. நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவும், மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதை வேண்டி இவ்வாறு செய்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் கடைசி நாளில், தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும். பின்னர் இவை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பழங்கள், காய்கறிகளை முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.