
இத்தலத்திலுள்ள பூமி நாச்சியார் சமேத உப்பலியப்பனை பசு நெய் தீபம் இட்டு துளசி பத்திரம் கொண்டு வழிபட வாழ்வில் வளமும், நலமும் நிறையும் என்பது ஐதீகம்.
திருப்பதி போக இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது.
இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகப் போற்றப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், இத்தலத்தில் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம், தொழில் செழிக்க இத்தலத்தில் ஏற்றப்படும் கோடி தீப விளக்குக்கு இயன்ற உதவி செய்தால் பயன்கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.