கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பகவதியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவை படத்தில் காணலாம்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இந்த விழா 8-ந் தேதி வரை நடக்கிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மன் மேள தாளம் முழங்க கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அம்மனை பக்தர்கள் வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு பஜனை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை மங்கள இசை, ஆன்மிக உரை, பக்தி இன்னிசை, இரவு அம்மன் வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை 8-ந் தேதி நடக்கிறது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.