
இன்று மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் உலகமே அல்லல்பட்டு கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பிறநாட்டை அபகரித்தல், பிறநாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதித்தல், தன் படை வலிமையால் அடுத்த நாட்டைத் தாக்குதல் போன்ற செயல்கள் சர்வசாதரணமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் உலகில் எங்கு பார்ப்பினும் போர்களும், போர் மேகங்களும் சூழ்ந்து மக்களை பயமுறுத்துகின்றன. விளைவு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போது எது நடக்குமோ என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது.
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போரினைப் பற்றிக் கூறுமிடத்து தற்காப்புப் போரினையே வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது. நீ எவரையும் தாக்காதே:
எவரும் என்றன் ஆணையின்றி,
இந்த கோடு தாண்டியே
துவங்க வேண்டாம் எதிரி மீது
முதலில் போரைத் தோழர்காள் !
அவர்கள் உம்மைத் தாக்க வந்தால் அம்பால் அவரை எதிர் கொள்க (நபிகள் நாயகக் காவியம், ப.354) என்று சுட்டிக் காட்டுகின்றார். ஆக, போரிடுவது என்பது சுயநலத் திற்காகவோ, பேராசைக்காகவோ இருத்தல் கூடாது என்பதைத் திருமறை அறிவுறுத்துகின்றது.
முனைவர். கி.சையத் ஜாகிர் ஹசன், விலிஷி இணைச் செயலாளர்.