
பின்னர் பாத்திமா அன்னைக்கு 53 பவுனுக்கு தங்க கிரீடத்தை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அணிவித்தார்.
தொடர்ந்து தனித்தனி சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், புனித பாத்திமா அன்னை எழுந்தருளி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் மறையுரை நடந்தது.
இதில் பங்குத்தந்தைகள் அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், ஜெபநாதன், தேவராஜன், நெல்சன், மரிய அரசு, ராபின், பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தென்மண்டல பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ராதாபுரம் பங்குதந்தை ராபின் மறையுரை வழங்குகிறார். மாலையில் ஜெபமாலை பவனியும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், அன்பிய பொறுப்பாளர் குழு, அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.