வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் தூய இருதய ஆலய தேர் பவனி
வால்பாறையில் தூய இருதய ஆலய திருவிழாவையொட்டி தேர் பவனி நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் தூய இருதய ஆலயத்தின் தேர்த்திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு கோவை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், பங்கு குரு மரியஜோசப் முன்னிலையிலும் கூட்டு பாடல் தேர்த் திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.திருப்பலியின் தொடர்ச்சியாக தேவாலயத்தை சுற்றி புனித செபஸ்தியாரின் அம்பு நேர்ச்சிக்கடன் பவனி ஒவ்வொரு குடும்பத்தினர் சார்பிலும் நடைபெற்றது. பின்னர் அன்பின் விருந்தும் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பங்கு மக்களின் சார்பில் முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையிலும், சமூக சேவாமையத்தின் இயக்குனர் குரு அருண் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தை சுற்றி தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் உருவம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதையடுத்து வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பங்கு மக்கள், வாழைத்தோட்டம் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.