
விழாவின் 2-ம் நாளான இன்று (புதன்கிழமை) ஆலந்தலை துணை பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 3-ம் நாள் முதல் 8-ம் நாள் வரையில் அருட்தந்தைகள் ஜான்சன், வளன் அரசு, மைக்கேல் ராயப்பன், பீட்டர் பாஸ்டின், அருமைநாதன், பபிஸ்டன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
9-வது நாளான 6-ந்தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடக்கிறது. அன்றைய தினம் காலை தூத்துக்குடி பேராயர் ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, உறுதி பூசுதல் நிகழ்வும், மாலை திருவிழா, மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் அருட்தந்தைகள் சேவியர் அருள்ராஜ், ராயப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 10-ம் திருநாளான 7-ந் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை கிளாட்வின் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ரவீந்திரன் தலைமையில் நற்கருனை பவனியும் நடக்கிறது.
8-ந் தேதி காலை 11 மணிக்கு சூசை அறநிலைய துணை இயக்குனர் அருட்தந்தை ஷீபாகர் தலைமையில் நன்றி திருப்பலி நடக்கிறது. பின்னர் அசன விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.