
தொடர்ந்து வந்த விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, பாடல் ஆராதனை போன்றவை நடந்தன. காலை 7 மணி முதல் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வழிப்பட்டனர்.
நிறைவு நாளான நேற்று காலை மலை அடிவாரத்தில் திருப்பலியும், காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். மாலை 4 மணிக்கு மலை உச்சியில் திருவிழா நிறைவு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மேலும் மலை அடிவாரத்தில் குருசுமலை அதிபர் வின்சென்ட் பீட்டர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.