கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
வால்பாறையில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி சென்ற போது எடுத்த படம்.
கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதனை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலம் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. அதுபோன்று கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் பங்கு மக்கள் இணைந்து கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்திற்கு தவக்கால பரிகார பவனி மேற்கொண்டனர். இந்த பவனியின்போது ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் 14 நிலைகளை தியானித்து சென்றனர். இந்த பவனியின் முடிவில் கருமலை வேளாங்கண்ணி திருத் தலத்தில் பங்கு குருக்கள் மரியஜோசப், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் வால்பாறை முடீஸ் சோலையார் நகர் ரொட்டிக்கடை பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.