
ஆனால் நம் தேவனோ நம்மை பயப்படவே வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்துகிறார். அதனால் தான் பயப்படாதே, திகையாதே கலங்காதே என்று ஆண்டவர் நம்மை ஆற்றித் தேற்றுவதை பார்க்கலாம். பயப்படாதே என்று வார்த்தை மட்டும் 365 முறை பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது கர்த்தர் நம்மை பார்த்து பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று அன்போடு சொல்கிறார்.
கர்த்தர் இத்தனை கரிசனையோடு ஏன் பயப்படாதே என்று தன் பிள்ளைகளுக்கு சொல்கிறார் தெரியுமா? பயம் சாத்தானுடைய கொடிய ஆயதங்களில் ஒன்று பயம் நம்முடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் முற்றிலும் நிர்மூலமாக்கக்கூடியது. நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்று 1 யோவன் 5-ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பயம் நம்முடைய ஜெயத்தை தடை செய்யும் ஆயுதமாயிருக்கிறது.
பயப்படும் எந்த கிறிஸ்தவனாலும் திறப்பில் நின்று பாரத்தோடு தன் தேசத்திற்காக ஜெபிக்க முடியாது. அற்புதத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ளவே முடியாது. சங்கீதம் 56-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்று நாம் வாசிக்கிறோம். எனவே நாம் பயப்படும் போது இயேசு கிறிஸ்துவை தைரியமாய் நம்பி நிற்போம். இந்த தவக்காலத்தல் விசுவாத்தோடு ஜெபித்து ஜெயம் பெறுவோம்.
சகோதரி.ரூத்பிமோராஜ். கே.ஜி,கார்டன்,திருப்பூர்.