
இதையொட்டி தேவாலயங்களில் இன்று காலை சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும்.
தவக்காலமான 40 நாட்களின் தொடர்ச்சியில் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் நிகழ்வுகளும் நடைபெறும். அதன்பின்னர் புனித வெள்ளியும் கடைப்பிடிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-வது நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.