
விழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல்திருவிருந்து வழங்கும் திருப்பலி அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.
விழாவின் 9-வது நாளான 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, திருமண பொன்விழா, வெள்ளிவிழா திருப்பலி, 11 மணிக்கு முதியோருக்கான திருப்பலி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை, புனிதரின் தேர் பவனி போன்றவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8.45 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார். பின்னர் 11 மணிக்கு புனிதரின் தேர் பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் தலைமையில், பங்குபேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.