
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தேர் பவனியை தொடங்கி வைத்தார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லாரன்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.