
காலை 11 மணிக்கு திருப்பய திருநாள் திருப்பலியை ஜான் ஆபிரகாமும், மாலை 3 மணிக்கு கொங்கனியில் மைக்கேல் மெனேசெசும், மாலை 4 மணிக்கு மலையாளத்தில் சூவன்ஸ்டாட் பாதர்சும், மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் விவியன் ரிச்சர்டும் திருப்பலி நடத்தினார்கள்.
முன்னதாக 1,003 மணித்தொடர் ஜெபமாலை ஜெபிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகள் தீர்க்கும் பொருட்டு ஜெபமாலை பூங்கா தரிசனம், மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பாத்திமா அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் வண்ண, வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாத்திமா அன்னை வீற்றிருந்து பவனி வந்தார்.
தேர்பவனியை புறாவை பறக்கவிட்டு ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தொடங்கி வைத்தார். இதில் பாத்திமா அன்னையின் ஆசிவேண்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அனைவருக்கும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாலஹள்ளி பாத்திமா அன்னை பங்கு நிர்வாகத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.