
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறும். தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 11-ந் தேதி காலை 10 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து, இரவு நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள், பங்குமக்கள் செய்துள்ளனர்.