
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
18.4.22 முதல் 24.4.22 வரை
சகாயமான வாரம். ராசி அதிபதி குரு சுகஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 5-ம் அதிபதி செவ்வாய் 3ம் இடத்தில் நிற்பதால் இளைய சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும். பாக்கிய அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் உச்சம் பெற்று நிற்பதால்ஆன்மீக சுற்றுப் பயணம் மற்றும் மகான்களின் சந்திப்பு கிடைக்கும்.
முன்னோர்களின் சொத்து தொடர்பான பாகப் பிரிவினைகள் நடக்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்து வழக்கில் திருப்பம் ஏற்படலாம். வீடு, வாகன தேவைக்கு உங்கள் அலுவலகத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலைக்கான உத்தரவு வரும். சிலருக்கு மாமியார் மூலம் அதிர்ஷ்ட பணம் அல்லது சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடை அகலும். வசதியான வாழ்க்கைத் துணை கிடைக்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். சிலருக்கு கடுமையான அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும். அதனால் டென்ஷன், கோபம் உருவாகும்.
பங்கு வர்த்தகத்தில் ஆச்சரியப்படும் விதத்தில் பெரும் லாபம் கிடைக்கும். முந்திரி, திராட்சை, பேரிட்சைபோன்றவைகள் படைத்து சித்தர்களை வழி படவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை
மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குருபகவான், சுக ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் தனாதிபதி சனி சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மீன - சுக்ரன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு மாதப்பிறப்புக்கு முன்பாகவே பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். மீன ராசி, சுக்ரனுக்கு உச்ச வீடு. அசுர குரு உச்சம் பெற்று தேவ குருவின் சொந்த வீட்டில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது எதிர்ப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திடீரென மாற்றியமைக்க நேரிடும். திடீர் விரயமும் வந்துசேரலாம். தேவ குருவோடு சுக்ரன் இணைந்திருப்பதால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். உறவுகளுடனான மனக்கசப்பு மறையும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 6-ல் சஞ்சரிக்கும்பொழுது நல்ல பலன்களே நடைபெறும். அதோடு புதன், கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால் வாய்ப்புகள் வாசல் தேடிவரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மறைமுகப் பகை மாறும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே மாற்றங்கள் நிகழலாம்.
புதன் வக்ர இயக்கம்
சித்திரை 17-ந் தேதி, ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். அது ஒரு வகையில் நன்மைதான். குடும்பத்தில் நிலவிய சொல் யுத்தங்கள் மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பாதையை அமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எடுத்த முயற்சி வெற்றி பெறும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு, உச்சம்பெற்ற சூரியனோடு இணைந்து ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறார். பஞ்சம ஸ்தானத்தில் புதன் உலா வரும்பொழுது, பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகிறது. எனவே பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். சூரியன், சுக்ரன் உச்சமும், குரு மற்றும் சனி சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கும் நிலை போன்ற காரணங்களால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வசதிகள் பெருகும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 17, 18, 24, 25, 28, 29, மே: 10, 11, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் தேகநலன் சீராகும். செல்வநிலை உயரும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகளைச் சமாளிக்கின்ற ஆற்றல் பிறக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடினாலும் அதற்கேற்ற ஊதியம் கிடைக்கப்பெறும். வீடு, வாகனம் வாங்குவதற்காக கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைக்கு வரும். சனிக்கிழமை விரதமும், அனுமன் வழிபாடும் சந்தோஷம் வழங்கும்.
ஆண்டு பலன் - 2022
அறிவாற்றலும், திறமையும் நிறைந்த தனுசு ராசியினருக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கிய பலன்களும் உங்களை தேடி வர உள்ளது. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகத்தை வழங்குவதுடன் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த புத்தாண்டில் நிறைவு செய்து மகிழ்வீர்கள்.
ராசி அதிபதி குருவின் சஞ்சாரம், தனாதிபதி சனியின் சஞ்சாரம் மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரவுள்ளது. புத்தாண்டிற்கான விரிவான பலன்களைப் பார்க்கலாம்.
குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் ஏப்ரல் 13, 2022 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன் படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறு வதற்கான சாத்திய கூறுகள் தென்படும். ஆண்களுக்கு மனைவி வழிச் சீதனம் வீட்டையும், மனதையும் நிரப்பும். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நண்பர்களால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. உங்க ளின் சகோதர, சகோ திரிகளுக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ராசியதிபதி குரு 3--ல் இருப்பதால் உங் களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் அல்லது பூர்வீக சொத் தில் அவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க லாம். இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற் றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க் கையால் குடும்பத்தில் மகிழ்சியும் சந்தோ ஷமும் அதிகரிக்கும்.
ஏப்ரல் 13-ல் குரு 4-ல் ஆட்சி பலம் பெற்றபிறகு புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் தகறும். வாடகை இடத்தில் குடியிருந்தவர்கள் சொந்த கட்டிடத்தில் குடியேறும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டு உறவினர்கள் மூலம் அனுகூலமான பதில் வந்து சேரும். தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தை கைகூடும். 4-ல் ஆட்சி பலம் பெறும் குருவிற்கு 2-ல் நிற்கும் சனியின் பார்வை கிடைப்பதால் அடமானத்தில் உள்ள சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும்.
உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஒய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும்.
சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும்.
குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பெரும் விரயம் ஏற்படாது என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார்.
26.2.2022 முதல் 6.4.2022 வரை தனுசிற்கு 5,12-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 2ல் இரண்டாம் அதிபதி சனியுடன் இணைகிறார். 5-ம் அதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேருவதால் பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான தசா புக்தி சாதகமாக இருந்தால் பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு பங்குச் சந்தை பெரும் இழப்பைத் தரும்.
செவ்வாய் தனுசிற்கு பூர்வ புண்ணியாதிபதி என்பதால் மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். தீடீர் லாபம் கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும். சில வயதான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் மரியாதை குறைவாக நடத்துவதாக கருதி முதியோர் இல்லம் சென்று விடுவார்கள்.
ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12, 2022 வரை ராசிக்கு 6-ல் இருக்கும் ராகு மற்றும் 12-ல் உள்ள கேதுவால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பலருக்கு உண்டாகும். சுய ஜாதகத்தை சரிபார்த்து வெளிநாடு வாய்ப்பை முடிவு செய்வது உத்தமம். கோட்சார ராகு ஒன்பதாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்யம் மனநிறைவு தரும்.
ஏப்ரல் 12-ல் ராகு 5ம் இடத்திற்கும் கேது 11-ம் இடத்திற்கும் மாறும் போது குழந்தைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆத்மஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9-ஆம் அதிபதிகளின் தசை நடந்து கொண்டிருந்தால் புகழ் கொடிகட்டிப் பறக்கும். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும்.
5ல் ராகு இருப்பதால் பூர்வீகச் சொத்து இன்று வந்துவிடும், நாளை வந்துவிடுமென, இலவுகாத்த கிளியாக நாளைக் கடத்தவேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். தந்தையின் ஆரோக்கியக் கேட்டினால் பொருள்விரயம் மிகும். எனினும் ஆயுள்குற்றம் இல்லை. தந்தை- மகன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தந்தை- மகன் பிரிந்துவாழ நேரும். தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். குலத்தொழில் செய்துவந்தவர்கள் அதைவிட்டு வேறுதொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.
திருமணம்: கோட்சார ராகு/கேது மற்றும் குருவால் திருமணம் தனுசு ராசிக்கு திருமணம் தடைபடவில்லை. 40 வயதைக் கடந்தும் திருமணத் தடை இருப்பவர்களுக்கு கூட ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும் என்பது ஜோதிட ரீதியான உண்மை. சுக்கிர தசை, சூரிய தசை நடப்பவர்களுக்கு சுய ஜாதகப்படி தோஷம் இருந்தாலும் 2022-க்குள் திருமணம் நடந்து விடும். சந்திர தசை நடக்கும் தனுசு ராசியினருக்கு அஷ்டமாதிபதி தோஷத்தால் திருமணத் தடை நீடிக்கும். கோட்சார குரு ஏப்ரல் 2022-ல் மீன ராசிக்கு பெயர்ந்தவுடன் 5-ம் பார்வையால் ராசிக்கு எட்டாம் இடமான கடகத்தைப் பார்ப்பதால் பலருக்கு திருமணத் தடை நீங்கும்.
பெண்கள்: ஏழரைச் சனியின் தாக்கம் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பொறுமையையும் நிதானத்தையும் கடை பிடிப்பது முக்கியம். பொருளாதார பற்றாக்குறை அகலும்.வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடிக்க வேண்டும். கணவர் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள்: நான்காம் அதிபதி குரு 4-ல் ஆட்சி பலம் பெறும் போது ஏப்ரல் 2022--க்கு மேல் நல்ல மாற்றம் உண்டாகும். அன்றாடம் அழியக்கூடிய காய்கறிகள், பழங்கள், நெல் போன்ற உணவுப் பொருட்களை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள்: தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.
முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும்.
அரசியல்வாதிகள்: அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக்கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.
மாணவர்கள்: மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.
மூலம்: குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதி ராகவே செயல்படுவார். உடல் உபாதைகள் அகலும். சனிக் கிழமை சிவ வழிபாடு செய்வது சிறப்பு.
பூராடம்: தொழில் வளம் பெருகி செல்வச் செழிப்பு ஏற்படும். மிகுதியான சுபவிரயம் உண்டாகும். எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக குறுக்கு வழியை தேடக்கூடாது.வெள்ளிக்கிழமை காலை 6---7 சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட கடன் சுமை தீரும்.
உத்திராடம் 1-ம் பாதம்: உங்களின் திட்டவட்டமான, தீர்க்கமான வழி நடத்தல் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். குடும்பத்தாரின் தேவையை குறிப்பறிந்து நிறைவேற்று வீர்கள். ஞாயிற்று கிழமை சிவன் கோவிலில் உலவாரப் பணிகள் செய்திட காரியசித்தி கிட்டும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
வில்லை போல் வளைந்து கொடுக்கும் தன்மை மிகுந்த தனுசு ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்க நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும், 11ம் இடத்தில் கேதுவும் நிற்கிறார்கள். குருபகவான் 4ம் இடத்திலும், சனி பகவான் 2, 3ம் இடங்களிலும் சஞ்சரிக்கிறார்கள். 5ம்மிட ராகுவால் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். 11ம்மிட கேதுவால் சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்க எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். 4ம்மிட குருபகவானால் ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். இரண்டாமிட சனி பகவானால் வேலைப் பளுவினால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.
குடும்பம்:லாபகரமான நேர்மறையான பலன்கள் அடுக்கடுக்கான அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
ஆரோக்கியம்: ஆயுள்,ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாகஎன்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும்.
திருமணம்:குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி நின்று 7ம் பார்வையாக 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கோட்சார ரீதியாக திருமணம் தடைபட்டது. குரு மீனத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் 8ம் இடத்திற்கு குருப் பார்வை கிடைக்கும். திருமணத் தடை அகலும்.
பெண்கள்: தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
மாணவர்கள்:பொழுதுபோக்கில் நாட்டத்தைக் குறைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 5ல் ராகு இருப்பதால் கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.
உத்தியோகஸ்தர்கள்:உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட கணக்கமற்ற சூழல் மாறும். 5ல் ராகு இருப்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் அதிக சம்பளத்திற்குஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள்.புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.
முதலீட்டாளர்கள்:வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள்.
கலைஞர்கள்:திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் உயரிய பதவி கிடைக்கும். சின்னத்திரை, பெரிய திரை, நாடக துறையினர் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இது பொற்காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.
விவசாயிகள்:வேளாண் பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவீர்கள் பச்சைபசேல் என்று விளைந்த வயல்களைப் பார்த்து பூரிப்படை வீர்கள். செவ்வாய் உங்களின் 5 ம் அதிபதி என்பதால் மண்ணை நம்பி உழைத்த உழைப்பிற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். பூ உற்பத்தியாளர்களுக்கு விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்.
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 5-11ம் இடத்தில் ராகு/கேதுக்கள் சஞ்சரிப்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும்முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு தீடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையைபுகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவார்.
இது போன்ற பின்விளைவுகள் மிகுதியாக இருக்கும்.குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காகசெய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம்இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும்.
பரிகாரம்:வியாழக்கிழமை கோவில் யானைக்குகரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.
வாழ்க்கைத் தரம் உயரும்
ஐந்தாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார்.அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
குடும்பச் சனியின் ஆதிக்கம், வாழ்வில் கடுமை இனிக்குறையும்!
தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலா வந்த சனிபகவான், இப்பொழுது 26.12.2020 அன்று இரண்டாமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏழரைச்சனியில், ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது ‘பாதச்சனி’ என்று அழைக்கப்படும் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மங்கல ஓசை மனையில் கேட்கும். செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. மேலும் உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும்.
சுபகாரியங்கள் நிறைவேறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். எதிரிகளின் தொல்லை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. கல்வி முன்னேற்றம், சுகம், வாகனம், தாய்வழி உறவு, இழப்புகளை ஈடுசெய்யும் அமைப்பு, எதிர்பாராத இடமாற்றம், ஆரோக்கிய நிலை, வெளிநாட்டு முயற்சி, தொழிலில் லாபம், உத்தியோக உயர்வு போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் இடங்களில் உங்களுக்கு யோகம் தரும் சனியின் பார்வை பதிகிறது. எனவே, அவைகளில் எல்லாம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. 4-ம் இட பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு உண்டு.
சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அரசியல் அனுகூலம் பெற்றவர்களின் ஆதரவோடும், உங்கள் வாக்கு வன்மையாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மறையும். தந்தை வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்துகள், நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். ‘வீடு வாங்க வேண்டும்’, ‘வாகனம் வாங்க வேண்டும்’ என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. உஷ்ணாதிக்க நோய்கள் வந்து போகும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவே அமைகின்றது. அஷ்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த கல்யாண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவும், வெளிமாநிலம் செல்லவும் நீங்கள் செய்த முயற்சி கைகூடும். இக்காலத்தில் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பம் உண்டாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். தைரியத்தோடு எதையும் செய்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கப்போகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டாகும். மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதியப் போவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ் சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். கேது பலத்தால் வருமானம் திருப்தி தரும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர ஒத்துழைப்பு குறையலாம். வாகன மாற்றம் வருவற்கான அறிகுறி தென்படும். தேக நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு இல்லத்துப் பூஜை அறையில் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமன் படத்தை வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபட்டால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
சனிபகவான் 2 ,3ம் இடத்திலும் ராகு பகவான் 5ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்த ராசி அதிபதி குருபகவான் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசிக்குகுரு பகவான் ராசி அதிபதி மற்றும் சுகாதிபதி. இந்த குருப் பெயர்ச்சி இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுத் தருவதாக இருக்கும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும் . குழப்பங்கள் தீரும்.
மனக் கலக்கங்கள் காரிய தாமதம் அகலும். இழந்த பதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு, பணமுடக்கங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.எந்த காரியத்தை யாரிடம் பேசி எப்படிசாதிக்க வேண்டும் என்ற திறமை வளரும். மற்றவரின் உதவியை விரும்பாமல்உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை நீங்களே முயன்று அடையும் பக்குவம் பெறுவீர்கள்.கிடைக்கும்நேரத்தையும் , சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேராசை குறையும்.புத்திசாலித்தனமும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல தோற்றப் பொழிவும், ஜன வசீகரமும் ஏற்படும். சாஸ்த்திர ஞானமும் வியாபார தந்திரமும் உயரும். உயர்ந்த லட்சியம் உங்களை ஆட்கொள்ளும்.
1,4ம் அதிபதியாகிய குரு 4ல் கேந்திரம் ஏறி அர்தாஷ்டம குருவாகிறார். குரு உங்களுக்குகேந்திராதிபதி என்றாலும்பெரிய பாதகங்கள் எதுவும்நிகழாது. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வையும்4ம் இடத்திற்கு இருப்பதால் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம்தோன்றும். குழப்பமான மனநிலை, சோர்வு, மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் அடைய முயல்வீர்கள். வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
உங்களின் 4ம் அதிபதி குரு என்பதால்நீங்கள் வாங்கும் வீடு, மனை அருகில் ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கும்வாய்ப்புப்புள்ளது.முறையான ஆவணங்கள், பட்டா இல்லாத சொத்து போன்ற வற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். இடதோஷம் உள்ள மனை அல்லது பூமியின் அதிர்வலையில் குறைபாடு உள்ள சொத்தில் வாஸ்து குறைபாடு சரி செய்யப்படும். தாயின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாயார் அல்லது தாய் வழி சுற்றத்தினரால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழிச் சொத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். கால்நடைபாக்கியங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 4ல் குரு உள்ளதால் மாணவ மாணவிகள் கடினமாக உழைத்தால் நல்ல மதிப்பெண் எடுப்பது நிச்சயம். 4ம் இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் பள்ளிப் படிப்பைபாதியில் நிறுத்திய மாணவர்கள் கூட மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பார்கள்.
5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வையும், சனியின் 7ம் பார்வையும் அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். இந்தகுருப் பெயர்ச்சி நோயிலிருந்து உங்களை காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தீராத கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றிலிருந்து சிறு நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாதசட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தால்அலைக்கழிகப்பட்டுமன வேதனை அடைந்தவர்களுக்கு வழக்கு வியாஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிரஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.
கோட்சாரத்தில் 5ல் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் தடைதாமதம்ஏற்படலாம். செயற்கை முறை கருத்தரிப்பிற்குமுயற்சி செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம். 17. 1.2023 க்கு பிறகு சனிபகவானின் 3ம் பார்வையும் 5ம் இடத்திற்கு இருப்பதால் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். குழந்தைகள் மூலம் குடும்பத்தில் தொல்லைகள் குழந்தைகளுக்காக கடன் படுதல் அல்லது குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு போன்ற சச்சரவு ஏற்படலாம்.
7ம் பார்வை பலன்கள்:அரசியல், ஆன்மிகம், கல்வி, சொந்த தொழில் போன்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் நிலவிய மந்த நிலை மாறி தொழில் சூடு பிடிக்கும். உழைத்த உழைப்பிற்கு நிறைந்த வாபம் உண்டு. தொழில் மூலம் மரியாதை கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும் .வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உங்களின் 10ம் அதிபதி புதன் என்பதால் கமிஷன் தொடர்பான தொழிலில்இருப்பவர்களுக்கு முன்னேற்றம்நன்றாக இருக்கும். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். 5ல் ராகு இருப்பதால் சிலர் புதிய வழி, குறுக்குவழி தொழில தந்திரங்களைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் குல தெய்வ கோவில் வழிபாட்டில் இருந்ததடை, தாமதங்கள் விலகும். விட்டுப் போன வழிபாடுகள், பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக வெளி நாட்டிற்குச் செல்லலாம். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. போதிய வருமானம் இருந்தாலும்இழப்புகள், விரயத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைந்துக் கொள்வது நலம். கவனமாக தொழில் நடத்த வேண்டிய காலம்.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்குபொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில்வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் கடினமான மற்றும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளுக்குகல்வியில் சிறு தடை அல்லது மந்த நிலை இருக்கும். குரு உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் போது 5ல் உள்ள ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது இந்த கால கட்டத்தில் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். அவசர தேவைக்கு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தற்போதைய நிதி நிலையை சரி செய்ய முடியும். குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு கடனால் கவலை உண்டாகும்.
பெண்கள்: திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை 11-12 மணி வரையான சனி ஒரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பட வேண்டும்.சனிக் கிழமை காலை 8-&-9 மணி வரையான செவ்வாய் ஒரையில் சிவனுக்குநல்லெண்ணெயில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஐந்தில் ராகு/ பதினொன்றில் கேது
பாக்கியவான்களான தனுசு ராசியினரே ராசிக்கு 5--ம் இடத்தில் ராகுவும், 11-ம் இடத்தில் கேதுவும் 4,5-ம் இடத்தில் குருபகவானும் 2 ,3-ம் இடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்கிறார்கள்.
5-ம்மிட ராகுவின் பொது பலன்கள்:5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புண்ணிய பலத்தால் கிடைக்கும் குல தெய்வ அனுகிரகம், குழந்தைகள், அதிர்ஷ்டம், கவுரவப்பதவிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுமிடம்.
ஆழ்மனதில் புதிய எண்ணங்கள் கடல் அலை போல் பெருகும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். உடலில் சோர்வு, அசதி இருக்காது. பருவ வயது பிள்ளைகள் போல் உற்சாகத்துடன் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம், தெம்பு , உற்சாகம் ததும்பும். எதிர்காலம் பற்றிய மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் காலம். பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்கள் முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். தான, தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாது.குழந்தை பேறு உண்டாகும். தந்திரத்தால் இழந்த பதவியை மீட்பீர்கள். சிலருக்கு சமுதாய அந்தஸ்தை அதிகரிக்கச் செய்யும் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தை தொழிலாக கொண்டவர்கள், கல்வி நிறுவனம் நடத்துபவர்கள், புரோகிதர்கள், கன்சல்டிங் நிறுவனங்கள், முக்கிய நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகு வின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை தனுசிற்கு பாக்கியாதிபதி. தடைபட்ட அனைத்து பாக்கிய பலன் களும் சித்தியாகும் நேரம். ஆத்மஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். தடைப்பட்ட பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். தொழிலுக்காக குடும்பத்தைப் பிரிந்த தந்தை வீடு திரும்புவார். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் பெற்றோர்கள் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். இதுவரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாடு வாய்ப்பு கிட்டும். குழந்தைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அரசு வகை ஆதாயமுண்டு. சிலர் தந்தையின் குலத் தொழிலில் பங்குதாரராக இணைந்து செயல்படலாம்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி தனுசிற்கு 6,11ம் அதிபதி. ஆறாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ராகு பயணிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள். புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும். சிலர் நரம்பு, வாதம் போன்ற நோய்களின் அறிமுகம் தென்படும். சிலர் புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பார்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை. உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் லௌகீக ஆர்வத்தில் இரண்டாவதாக ஒரு குடும்பம் அமைப்பார்கள்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுவாதி ராகுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம். ஒருவர் தேவையற்ற அவமானம், மனச் சங்கடம், தாழ்த்தப்படுவது போன்றவற்றை சந்திப்பதும் ஏழரைச் சனியின் காலத்தில்தான். கடந்த ஏழரை ஆண்டுகளாக பட்ட வேதனை அவமானம் மாளாத துயரத்திலிருந்து விடுபடுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் ஏழரைச் சனியிலிருந்து முழுமையாக விடுபட்டுவீடுவீர்கள் என்பதே உங்களுக்கு பெரிய லாபம் தான்.புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கருத்து வேறுபாட்டால் ஒதுங்கி இருந்த மூத்த உடன்பிறப்பு போனில் நலம் விசாரிப்பார் அல்லது வீடு தேடி வந்து நட்பு பாராட்டுவார். வெளிநாட்டில், வெளியூரில் வசிக்கும் சிலரின் மூத்த சகோதரர் சொத்தை விட்டுக் கொடுக்கலாம்.
11மிட கேதுவின் பொது பலன்கள்:11மிடம் என்பது லாப ஸ்தானம் மட்டுமல்ல உப ஜெய ஸ்தானம். ஒரு மனிதனுக்கு வெற்றியையும் வாழ்வியல் மாற்றத்தையும் ஏற்படுத்தி தரக் கூடிய இடம். பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீகச் சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.
இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். தொழிலை விரிவு செய்ய, புதிய தொழில் கிளைகள் துவங்க ஏற்ற நேரம். உங்கள் முழுத் திறமையையும் காட்டி நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். சிலருக்கு மனைவி மற்றும் மாமானர் மூலம் சொத்து பணம் கிடைக்கும். சிலருக்கு திருமணத்தில் பெரிய வரதட்சணை பணம் அல்லது பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு தனுசிற்கு ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதி. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கும் வாடகை வருமானம் வந்து சேரும். சிலருக்கு வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். .பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள்.
தாயின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். 18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுவாதி ராகுவின் நட்சத்திரம். ராசிக்கு 5ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் காலம். திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.
இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை தனுசிற்கு 5,12ம் அதிபதி. தனுசு ராசியினருக்கு வம்சம் தழைக்க ஆண் வாரிசுகள் உருவாகும். வெகு சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கலாம். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சாதகமான காலமாகும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள்கூட பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள். சிலர் நெடுந்தூர தீர்த்த யாத்திரை சென்றுவரலாம். துறவு மனப்பான்மை மிகுதியாகும்.
அதிக பொருள் ஈட்டும் ஆசையற்றவர்களையும், நியாயமாக கடுமையாக உழைப்பவர்களுக்கும் 5மிட ராகுவும் பதினொன்றாமிட கேதுவும் துணை நிற்பார்கள்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406


